தண்டையார்பேட்டை: சென்னை பாரிமுனை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் பல்கியா பேகம் (25). அண்ணாநகர், முகப்பேரை சேர்ந்தவர் பிரவீன் (24). வேளச்சேரியை சேர்ந்தவர் சந்துரு (26).இவர்கள் 3 பேரும் வடக்கு கடற்கரை போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதில், ‘‘ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து பாரிமுனை மண்ணடி பகுதிக்கு சென்றோம். அங்குள்ள அலுவலகத்தில் சாலிகிராமத்தை சேர்ந்த மீனா (32), மண்ணடியை சேர்ந்த சங்கர் (35) ஆகியோர் இருந்தனர். அவர்கள், ‘‘லோன் வாங்கி தருகிறோம். உங்களது அனைத்து ஆவணங்களும் வேண்டும்’’ எனக் கூறி எங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கிக்கொண்டனர். ‘சில நாட்களில் உங்களது வங்கி கணக்குக்கு லோன் பணம் வந்துவிடும்’ என கூறினர். ஆனால் பணம் வரவில்லை.