லாகூர்: சீனாவில் உள்ள ஆண்களை திருமணம் செய்வதற்காக பாகிஸ்தானில் இருந்து 629 இளம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை தலா ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்து்ள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதிலும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதால் திருமணத்துக்கு பெண் கிடைக்காத நிலை சீனாவில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இளம்பெண்களை ஏஜென்டுகள் மூலம் விலைக்கு வாங்கி சீனாவுக்கு கடத்தி செல்கின்றனர். குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ குடும்ப பெண்களை ரூ.40 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான விலைக்கு பெற்று திருமணத்திற்காக சீனாவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.