சான் பிரான்சிஸ்கோ: கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட். இதன் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவரான லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் தங்கள் பதவியில் இருந்து விலகியுள்ளனர். இதனை தொடர்ந்து, தற்போது கூகுள் சிஇஓவாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சுந்தர்பிச்சை, ஆல்பபெட்டின் சிஇஓவாக கூடுதல்பொறுப்பு வகிப்பார். கூகுள் நிறுவனத்தை மறுசீரமைக்க, ஆல்பபெட் 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் அது கூகுளின் தாய் நிறுவனம் ஆக்கப்பட்டது. இதன் சிஇஓவாக லாரி பேஜ், தலைவராக செர்கே பிரின் பொறுப்பேற்றனர். இதையடுத்து கூகுளின் சிஇஓவாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பேற்றார். இந்நிலையில், ஆல்பபெட் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக லாரி பேஜ், செர்கே பிரின் ஆகிய இருவரும் திடீரென அறிவித்தனர்.