சென்னை: முதல்வர் எடப்பாடியை மத்திய அரசின் மேஸ்திரி என்று விமர்சனம் செய்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், கடந்த ஜூலை 14ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தார். அப்போது அவர், ‘‘இப்போ எது நம்மகிட்ட இருக்கு சொல்லுங்க, எல்லாமே மத்திய அரசு கிட்டதான் இருக்கு, மாநிலம் எதுக்கு, அந்த மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் இருப்பது எதுக்கு. வேலை ஆட்களை கவனிக்க சும்மா ஒப்புக்கு ஒரு மேஸ்திரி போடுவோம்ல அதுமாதிரி தான் தமிழக முதல்வர், எந்த உரிமையும் நம்மிடமில்லை’’ என்று சீமான் பேசியிருந்தார்.