ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து சவரன் ரூ.29,350-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.37 உயர்ந்து ரூ.3665-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் தங்கம் விலை சற்று குறைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்வு தொடங்கிவிட்டது. நவம்பர் மாதத்தைப் போலவே இந்த மாதமும் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்படுமா என்ற அச்சம் வாடிக்கையாளர் மத்தியில் நிலவுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு அதிகரித்து ரூ.48.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 47.70 ரூபாயிலிருந்து 48.60 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 47,700 ரூபாயிலிருந்து 900 ரூபாய் உயர்ந்து ரூ.48,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்தும் நிலவி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அதை வாங்குவதில் தேக்கநிலை தொடரும் என கூறப்படுகிறது.

Related Stories: