கணவர் தரப்பில் கொலை மிரட்டல் பாதுகாப்பு கேட்டு நடிகை கமிஷனர் அலுவலகத்தில் புகார்: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: கைது செய்யப்பட்ட கணவர் தரப்பில் இருந்து தொடர் கொலை மிரட்டல் வருவதால் பாதுகாப்பு கேட்டு சின்னத்திரை நடிகை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது மகளுக்கு போதையில் கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.சென்னை அடையாறு எல்.பி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஜெய (32). சின்னத்திரை நடிகையும் நடனக்கலைஞரான இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து ஒரு மகள் உள்ளார். மகள் அருகில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஜெய சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் (34) என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே, தனக்கு தெரியாமல் 40 சவரன் நகை மற்றும் ₹35 லட்சம் பணத்தை வைத்து ஈஸ்வர் தனியாக வீடு வாங்கினார். அந்த வீட்டை அவரது தாய் பெயரில் பதிவு செய்துள்ளார். இதனால் நடிகை ஜெயக்கும், ஈஸ்வருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வர், ஜெயயை அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ராயப்பேட்ைட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

பின்னர் சம்பவம் குறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் ஈஸ்வர் மீது புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பிரிவுகளின் கீழ் நடிகர் ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திரா (53) ஆகியோரை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்தனர்.இந்நிலையில் நடிகை ஜெய தனது மகளுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என்னை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட எனது கணவர் மற்றும் அவரது தாய் சந்திரா தரப்பில் இருந்து பலர் செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே எனக்கும் எனது மகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், கணவர் குடிபோதையில் எனது மகளிடம் பாலியல் ரீதியாக பல தொல்லைகள் கொடுத்தார். போதையில் வீட்டின் பூஜை அறையை அசிங்கப்படுத்தினார். அதை கேட்டால் என்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகை மற்றும் பணத்தை வைத்து அவரது தாய் பெயரில் வீடு வாங்கி உள்ளார். அவர்களிடம் இருந்து சொத்தை மீட்டு தர ேவண்டும். எனது கணவருக்கு மகாலட்சுமி என்பவருடன் தொடர்பு உள்ளது. கணவர் கைது செய்யப்பட்டதும் அவரது காதலி மகாலட்சுமி தூண்டுதலின் பெயரில் மிரட்டல்கள் வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: