சென்னை: மழையால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, தமிழக அரசு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மழை பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதையும் மீறி பல்வேறு இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர்களில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். கடலூர் மாவட்டம்தான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. 8000க்கும் கூடுதலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.