ராய்ப்பூர்; அயோத்தியில் இருந்து ராமர் வனவாசமாக சென்ற வழித்தடங்களை சுற்றுலா தலமாக்க சட்டீஸ்கர் அரசு முடிவு ெசய்துள்ளது. ராமர் அயோத்தியில் இருந்து 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அவ்வாறு சென்றபோது 75 இடங்கள் வழியாக வனத்தை அடைந்ததாகவும், வழியில் 51 இடங்களில் அவர் தங்கி சென்றதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சட்டீஸ்கர் வனப் பகுதியில் 8 வழிகளில் அவர் சென்றதாக கூறப்படுகிறது, இந்த இடங்களை சுற்றுலா தலமாக்க இம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சட்டீஸ்கர் மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் பூபேஸ் பாகல் தலைமையில் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில செய்தி தொடர்பாளர் கூறியதாவது: