பசுக்களை கடத்தியதாக 2 பேர் அடித்து கொலை

கூச்பெஹர்:  மேற்கு வங்கத்தில் கூச்பெஹர் மாவட்டத்தில் உள்ள மதபங்க பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால்நடைகள் திருடு போயுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரபியுல் இஸ்லாம் மற்றும் பிரகாஷ் ஆகியோர் வாகனத்தில் 2 பசுக்களுடன் சென்றுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பசுக்களை திருடி செல்வதாக சந்தேகம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ரபியுல் மற்றும் பிரகாசை கடுமையாக தாக்கியதல் இருவர் உயிரிழந்தனர். வாகனத்தை தீ வைத்து எரித்தனர். இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: