கூச்பெஹர்: மேற்கு வங்கத்தில் கூச்பெஹர் மாவட்டத்தில் உள்ள மதபங்க பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால்நடைகள் திருடு போயுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரபியுல் இஸ்லாம் மற்றும் பிரகாஷ் ஆகியோர் வாகனத்தில் 2 பசுக்களுடன் சென்றுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பசுக்களை திருடி செல்வதாக சந்தேகம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ரபியுல் மற்றும் பிரகாசை கடுமையாக தாக்கியதல் இருவர் உயிரிழந்தனர். வாகனத்தை தீ வைத்து எரித்தனர். இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.