ஆந்திராவில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் சாவு 5 பேர் கவலைக்கிடம்

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதிக்குட்பட்ட அட்ட நாட்டம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ், கோவிந்தப்பா, சத்யநாராயணா, ரகு, ராமமூர்த்தி, திம்மராயப்பா. இவர்கள் நேற்று அதே பகுதியில் உள்ள கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்தார்களாம். சில நிமிடங்களிலேயே ரகு வாந்தி எடுத்த நிலையில் பரிதாபமாக இறந்தார்.தொடர்ந்து வெங்கடேஷ் உட்பட 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ராமமூர்த்தியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  மற்றவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: