ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு சிறையில் ப.சிதம்பரத்திடம் 4 மணி நேரம் விசாரணை: அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி

புதுடெல்லி: ஐஎனஎக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள்  நேற்று நாலரை மணி ேநரம் விசாரித்தனர். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 16ம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருடைய ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 15ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ப.சிதம்பரம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் இரண்டு நாள் விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கேட்டது. இதற்கு  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து,  அமலாக்கத்துறையின் 4 அதிகாரிகள் கொண்ட குழு நேற்று காலை திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் நேற்று காலை 10 முதல் 1 மணி வரையும், அதேப்போல் பிற்பகல் ஒன்றரை மணி நேரமும் என மொத்தம் 4 மணி நேரம் 30 நிமிடம் விசாரணை நடத்தியது.

இதில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் வழங்கிய பின்னர் தற்போது புதியதாக கிடைத்துள்ள பல முக்கிய ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு அவரிடம் வாக்கு மூலம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: