புதுடெல்லி: இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான் என பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் டிசம்பர் 9ம் தேதிக்கு நேற்று ஒத்திவைத்தது. தமிழகத்தில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பள்ளப்பட்டி பகுதியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் இடம் என்பதால் இப்படி பேசவில்லை. காந்தியின் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதை சொல்கிறேன். நாட்டில் சமரசம் தலைத்தோங்கி இருக்க வேண்டும் என பேசினார்.