×

ஸ்டான்லி மருத்துவமனை அருகே கத்திமுனையில் பணம் பறிக்க முயன்ற ஆசாமி பிடிபட்டார்

தண்டையார்பேட்டை: வியாசர்பாடி சாலைமா நகரை சேர்ந்தவர் நாகராஜ் (49), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை ஆட்ேடாவில் கொருக்குப்பேட்டை அருகே சென்றபோது, வாலிபர் ஒருவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறி ஆட்டோவில் ஏறியுள்ளார். அவரை மருத்துவமனையில் இறக்கி விட்டுவிட்டு நாகராஜ் பணம் கேட்டபோது, அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டியதுடன், நாகராஜிடம் இருந்த செல்போன், பணத்தை பறிக்க முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பிய நாகராஜ், மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து, அந்த வாலிபரை மடக்கி பிடித்து வண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த சுரேஷ் (29) என்பது தெரிந்துள்ளது.இதையடுத்து அவரை கைது செய்தனர்.

„ திருமங்கலம் காமராஜ் நகர் பாடிக்குப்பம் ரோடு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரிடம், கத்தி முனையில் வழிப்பறி செய்த, பாடி புதுநகரை சேர்ந்த மோசஸ் (29), சுந்தர் (24), முரளி (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். „ விருதாச்சலம் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில் (42), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அரும்பாக்கம் கூவம் ஆற்றின் ஒரமாக சிறுநீர் கழித்தபோது, அங்கு வந்த 2 பேர், செந்தில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதற்கு செந்தில் தன்னிடம் பணம் இல்லை என்றுள்ளார்.  இதனால் இருவரும், செந்திலை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் செந்திலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரணையில், அரும்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (26), லோகேஷ் (22) ஆகியோர், செந்திலை வெட்டியது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்

Tags : Knife Asami ,knife edge ,Stanley Hospital ,Stanley Hospital Grab , Stanley Hospital, extortion
× RELATED மணலி நெடுஞ்சாலையில் நேற்று மாநகர...