பெரம்பூர்: அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (52). இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகன் மற்றும் 19 வயதில் ஒரு பெண் உள்ளனர். இந்த பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. மூத்த மகன் சதீஷ்குமார் திருமணமாகி வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை லோகநாதன் மது போதையில் தனது நண்பர்கள் அய்யாவு (48) மற்றும் மணி ஆகியோருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.