மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு பாலியல் தொல்லை தப்பியோடிய தந்தைக்கு வலை

பெரம்பூர்: அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (52). இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகன் மற்றும் 19 வயதில் ஒரு பெண் உள்ளனர். இந்த பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.  மூத்த மகன் சதீஷ்குமார்  திருமணமாகி வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை லோகநாதன் மது போதையில் தனது நண்பர்கள் அய்யாவு (48) மற்றும் மணி ஆகியோருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.

 அங்கு, தனிமையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அந்த பெண் அலறி கூச்சலிடவே அங்கிருந்து சென்றுவிட்டனர்.  இந்நிலையில், அண்ணன் சதீஷ்குமார் வீடு திரும்பியபோது, அந்த பெண் நடந்ததை கூறியுள்ளார்.  இதையடுத்து சதீஷ்குமார் அயனாவரம் தலைமைச் செயலக காலனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள தந்தை லோகநாதன், ஐய்யாவு, மணி உள்ளிட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: