போக்சோவில் சிறுவன் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் 16வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.  புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது 17 வயது மகன், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த பெற்றோர், இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால், கடந்த 18ம் தேதி  இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இருவரும் மீட்கப்பட்டனர். விசாரணையில்  16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Related Stories: