சாஸ்திரி பவன் முற்றுகை 30 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது ெசய்ய கோரியும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் விடுதி கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதை கண்டித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை நேற்று முன்தினம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். இந்நிலையில், தடையை மீறி முற்றுகை போரட்டம் நடத்தியதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடசென்னை மாவட்ட தலைவர் கார்த்தீஸ் குமார், தென் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 30 பேர் மீது ஐபிசி 143 மற்றும் 41(6) எம்சிபி சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ், நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: