மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

அண்ணாநகர்: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மைமூன் (26). இவர், கோயம்பேடு மார்க்கெட் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணியில் மைமூன் ஈடுபட்டபோது, தரையில் கிடந்த சேதமடைந்த மின் வயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இறந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: