×

ஆண்களுக்கு கருத்தடை திட்டம் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவர்களுக்கு பரிசு

சென்னை: தேசிய குடும்பல நல திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்கள் கருத்தடை செய்துகொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சஞ்சீவிராயன்பேட்டை, புளியந்தோப்பு, அடையாறு வெங்கட்ரத்னம் நகர் ஆகிய 3 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
இதில், 144 ஆண்கள் கருத்தடை சிகிக்சை பெற்றனர்.   கருத்தடை செய்து கொண்ட ஆண்களுக்கு தலா 1100 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கான பாராட்டு விழா நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி மருத்துவர்களை பாராட்டி கேடயம் வழங்கினார். இதில் மாநில குடும்பல நல இயக்குநர் ஹரிசுந்தரி,  மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறை கூடுதல் இயக்குநர் ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய செவிலியர்களுக்கு ₹5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

Tags : physicians , Men, contraception program, doctors, gifts
× RELATED பெரம்பலூரில் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்