சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில், தொமுச சார்பில் நிர்வாகிகள் சரவணன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மின்வாரியத்தில் 20 ஆயிரம் கள உதவியாளர் பதவியும் 8000க்கும் மேற்பட்ட கம்பியாளர் பதவியும், ஆக 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்தாலும் அதில் பல ஆண்டுகளாக வாரியத்துக்காக உழைத்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்துவதில்லை. அது மட்டுமில்லை, அவர்களுக்கு கூலியைக் கூட முறையாக கொடுப்பது இல்லை. தமிழகத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் சமயத்தில் முழுவதுமாக பணியாற்றியது ஒப்பந்த தொழிலாளர்கள்தான். கடந்த ஆண்டு கஜா புயலின் போதும் சரி, அதற்கு முன்பான வர்தா புயல் சமயங்களிலும் சரி அப்பகுதியின் நிலைமைகளை சீராக்கியது ஒப்பந்த தொழிலாளர்களின் ஈடு இணையற்ற உழைப்புதான் என்பது அனைவரும் அறிந்ததே.