புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள், குடும்பத்தினருக்கு இனி எஸ்பிஜி என்ற சிறப்பு பாதுகாப்பை விலக்கி கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர்களான காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு கடந்த 18 ஆண்டுகளாக எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கு தற்போது நேரடியாக எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாததால் எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.