சென்னை: கோவையில் இளம் பெண் ராஜேஸ்வரி விழுந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் எதுவும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம்தேதி சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்தார். அவரை வரவேற்று, அவினாசி ரோட்டில் பல இடங்களில் சாலையோரம் அ.தி.மு.க. கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்தது. அன்றையதினம், பீளமேடு கோல்டு வின்ஸ் பகுதியில் சாலையோரம் நடப்பட்டிருந்த 15 அடி உயர சவுக்கு கொடிக்கம்பம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. அப்போது அவ்வழியாக லாரியை ஓட்டி வந்த டிரைவர், லாரி மீது கொடிக்கம்பம் விழாமல் இருக்க லாரியை சற்று திருப்பினார். அப்போது அவ்வழியாக மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி (22), பைக் ஓட்டி வந்த விஜய் ஆனந்த் ஆகியோர் மீது லாரி மோதியது.
கோவையில் இளம் பெண் ராஜேஸ்வரி விழுந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் எதுவும் இல்லை : ஐகோர்ட்டில் அரசு தகவல்
- இடத்தில்
- அஇஅதிமுக
- ராஜேஸ்வரி
- கோவா
- அரசு
- ராஜேஸ்வரி
- கோயம்புத்தூர் இலாம்புனே
- தமிழ்நாடு அரசு
- சென்னை உயர் நீதிமன்றம்