அரியலூர் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அஞ்சம்மாள் என்பவர் உயிரிழந்தார். கனமழை காரணமாக கொங்குநாட்டார் குப்பம் கிராமத்தை சேர்ந்த அஞ்சம்மாளின் கூரைவீட்டு சுவர் சரிந்து விழுந்தது. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அஞ்சம்மாள் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: