நாகையில் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: நாகை மாவட்டம் கீழ்வேளூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈஸ்வரன் என்பவரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2012ல் கீழ்வேளூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்து கொலைசெய்ததாக ஈஸ்வரன் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், ஈஸ்வரனுக்கு ஆயுள் தணடனையை விதித்து 2015ல் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஈஸ்வரன் மேல்முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டு மனுவை  விசாரித்து தள்ளுபடி செய்த நீதிபதிகள், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

Related Stories: