மதுரையில் பெண் சிசுக்கொலை: அதிகாரிகளின் விசாரணையால் பரபரப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலை நடந்துள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு நிலவியது. உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியை சேர்ந்த ஜெயசந்திரன், ஜெயப்பிரியா தம்பதியரின் பச்சிளங்குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. குழந்தையின் இறப்புக்கு காரணம் உடல்நல குறைவால் ஏற்பட்ட இயற்கை மரணமா? பெண் சிசுக்கொலையா? என்று விசாரணை நடத்தப்பட்டது. பிறந்து 16 நாட்களே ஆனநிலையில், உயிரிழந்த பெண்குழந்தை ரகசியமாக புதைக்கப்பட்டதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். கொட்டும் மழையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு பரிசோதனை செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Related Stories: