இலங்கை நடிகை பிரசாந்தியை ஆஜர்படுத்தக் கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: இலங்கை நடிகை பிரசாந்தியை ஆஜர்படுத்தக் கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடிகை பிரசாந்தியை தேடி வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருந்த பிரசாந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் மாயமானார். மாயமான நடிகை பிரசாந்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: