அனைத்து இடஒதுக்கீடு விவரங்களை வெள்ளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: அனைத்து இடஒதுக்கீடு விவரங்களை வெள்ளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசு பணி மற்றும் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்த அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசு ஒதுக்கிய எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படி இடஒதுக்கீடு ஏன் தரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். எம்பிபிஎஸ் மற்றும் எம்.டி.படிப்பில் இடஒதுக்கீடு பற்றிய டி.ஆர்.பாலு கேள்விக்கு மக்களவையில் அமைச்சரோ, பிரதமரோ உரிய பதில் தரவில்லை எனக் கூறியுள்ளார்.

Related Stories: