×

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கு : அப்பாவு, இன்பதுரை தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை நவ.29ம் தேதி வரை வெளியிட
உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை


*கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க.வின் சார்பில் எம்.அப்பாவும், அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ்.இன்பதுரையும் போட்டியிட்டனர்.

*இதில், இன்பதுரை 69,590 வாக்குகளையும் எம்.அப்பாவு 69,541 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

*இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

*இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடைசி மூன்று சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை தாக்கல் செய்ய தெரிவித்ததோடு அவற்றை தற்போது எண்ணியும் முடித்துள்ளது.

*இந்த நிலையில் இன்பதுரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘மறுவாக்கு எண்ணிக்கை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது.

*ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவை மட்டும் வெளியிட தடை விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  தமிழகத்தின் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை நவ.22ம் தேதி வரை வெளியிட தடை விதித்தது.

நவ.29ம் தேதி வரை வெளியிட உச்சநீதிமன்றம் தடை

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை நவ.29ம் தேதி வரை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன் அப்பாவு, இன்பதுரை தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன் இறுதி விசாரணை தேதி அடுத்த வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தது.


Tags : Supreme Court ,Radhapuram , Radapuram, Repeat, Count, Supreme Court, Prohibition, Dad, Infatuation
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...