சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வழக்கின் விசாரணையில், சிபிஐயில் பணியாற்றிய அதிகாரிகளை கொண்ட மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.