சென்னை: கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி ராதாகிருஷ்ணன் எனபவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.