சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்பட 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 26 பேர் மீதும் 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளார்.