சென்னை: புதிய கல்விக் கொள்கை அல்ல, புதிய புல்டோசர் கொள்கை என்று மாநிலங்களவையில் வைகோ குற்றம்சாட்டினார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தது. அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறுக்கிட்டு பேசியதாவது: அவைத்தலைவரும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை காலத்தில் கொடும் சிறைகளில் வாடியபோது இந்த கல்வித்துறையை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து பொதுப்பட்டியலுக்கு மாற்றிய அதிகாரங்களை மத்திய அரசு கபளீகரம் செய்துகொண்டது. இது புதிய கல்விக்கொள்கை அல்ல. மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை ஆகும். அவைத் தலைவர் வெங்கையா நாயுடு: உங்கள் கேள்விக்கு வாருங்கள்.