சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக தமிழக கவர்னரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டதாக கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது தமிழக தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.