புதுடெல்லி: அரசு துறைகளில் மோசடியை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்ப வழிகளை கண்டறிய வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இந்த தருணத்தில், அரசு அலுவலகங்களில் நடைபெறும் மோசடிகள், ஊழல்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். இதற்கென புதிய தொழில் நுட்பத்தை கண்டறிய வேண்டும். இதற்கான முயற்சியில் சிஏஜி கணக்காயர்கள் தீவிரம் காட்ட வேண்டும்.