லண்டன்: வலிப்பு நோயை தடுப்பதற்காக மூளை காயங்களுடன் பிறக்கும் குழந்தைகள் பற்றிய விரிவான மற்றும் உலகில் இதுவரை இல்லாத வகையிலான பிரமாண்டமான ஆய்வை இந்தியா, இங்கிலாந்து நிபுணர்கள் தொடங்கி உள்ளனர். பிரசவத்தின் போது குழந்தையின் மூளையில் ஏற்படும் காயங்கள்தான் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனை தடை செய்கிறது. இதுதான் வலிப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கான விரிவான ஆராய்ச்சியை இந்திய நிபுணர்களும், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி நிபுணர்களும் கூட்டாக தொடங்கி உள்ளனர். இந்த ஆராய்ச்சி திட்டத்துக்கு, தேசிய சுகாதார ஆராய்ச்சி மையம் ₹31 கோடி வழங்கியுள்ளது.
குழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதை தடுக்க சென்னை மருத்துவ கல்லூரி உட்பட 3 கல்லூரிகளில் பிரமாண்ட ஆய்வு: இந்தியா - இங்கிலாந்து நிபுணர்கள் கூட்டு முயற்சி
- கல்லூரிகள்
- கூட்டு முயற்சி
- குழந்தைகள்
- மருத்துவக் கல்லூரி
- சென்னை
- இந்தியா
- நிபுணர்கள்
- இங்கிலாந்து
- இங்கிலாந்து
- சென்னை மருத்துவக் கல்லூரி