பாங்காங்: லாவோஸ் நாட்டில் நேற்று காலை பூகம்பம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோளில் 6.1 புள்ளிகளாக பதிவானது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டில், தாய்லாந்து எல்லை அருகே நேற்று காலை 6.50 மணிக்கு திடீரென பூகம்பம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினார்கள். பல இடங்களில் கட்டிடங்கள், வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.