சென்னை: பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளுக்கு இடையிலான அகில இந்திய மண்டல ஹாக்கிப் போட்டியில் தென் மண்டலம் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் ஆயுதம், ஆடை, வாகன தொழிற்சாலைகளுக்கு இடையிலான 37வது மண்டல ஹாக்கிப் போட்டி சென்னை அருகே ஆவடியில் நடக்கிறது. இதில் 2வது நாளான நேற்று தென் மண்டலம்-மேற்கு மண்டலம் அணிகள் மோதின. இதில் தென் மண்டலம் 6-0 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பெற்றது. அந்த அணியின் ஜெகன் 3, கண்ணன், முகமது மவுஜஹித், கோபி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்த வெற்றி மூலம் தென் மண்டலம் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றது.முன்னாக நடைபெற்ற மத்திய மண்டலம் 1-0 என்ற கோல் கணக்கில் வடக்கு மண்டலத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மத்திய மண்டல அணிக்காக பிரசாத் ஒரு கோல் அடித்தார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் மண்டலம்-மத்திய மண்டலம் அணிகள் விளையாட உள்ளன.