பல்லாவரம்: பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பால்துரை (38). இவர், நேற்று முன்தினம் இரவு பொழிச்சலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பொழிச்சலூர் பிரதான சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து, ‘நீங்கள் யார்?, எதற்காக இந்த நேரத்தில் இங்கு நிற்கிறீர்கள்? என விசாரித்துள்ளார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், 3 பேரையும் காவல் நிலையம் வரும்படி பால்துரை அழைத்துள்ளார்.