சென்னை: எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக, பழமையான 75 மரங்களை வெட்ட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் எழும்பூரை சேரந்த கேப்டன் பி.பி.நாராயணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எழும்பூர் கண் மருத்துவமனை மிகப்பெரிய பழமையான கண் மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், மருத்துவமனையை விரிவுப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டிடங்களை கட்டப்படுகிறது. இதற்காக, வளர்ந்து பெரிதாக உள்ள 75 மரங்களை வெட்டுவதற்கு மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த மரங்களில் பல வகையான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளும் இந்த பகுதியில் வசிக்கின்றன. மேலும், இந்த மரங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. மருத்துவமனை விரிவாக்கம் அவசியம்தான்.