ஆலந்தூர்: கிண்டி சின்னமலை அண்ணா சாலையில் உள்ள தனியார் வங்கியில் நேற்று காலை 9.30 மணிக்கு துப்புரவு பணியாளர் ஒருவர், சுத்தம் செய்வதற்காக வங்கியின் வெளிக் கதவை திறந்தார். அப்போது வங்கியின் உள்ளிருந்து கரும்புகை வந்ததால் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்னபேரில், கிண்டி, தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைத்தனர்.