சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பாத்திமா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.