மேலூர்: தேசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் பல பரிசுகளை வென்று ஓவரால் சாம்பியன்ஷிப் பெற்று மேலூர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தினர். தேசிய அளவிலான யோகாசன போட்டி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மேலூர் ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான வெற்றிகளை இப்பள்ளி மாணவர்கள் குவித்தனர்.