பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா அணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்றது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 4 போட்டிகளில் இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில் 5 வது மற்றும் இறுதி 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடைபெற்றது.

பிரோவிடென்சில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா 9 ரன்னிலும், ஸ்மிரிதி மந்தனா 7 ரன்னிலும் வெளியேறினர். ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (50), வேதா கிருஷ்ணமூர்த்தி 57 ரன்களும் அடித்தனர். ஓவர் முடிவில் இந்திய பெண்கள் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய பெண்கள் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, தொடரையும் 5-0  என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. இதனிடையே சுஷ்மா வர்மா தொடர் நாயகி விருதையும், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆட்ட நாயகி விருதையும் பெற்றனர்.

Related Stories: