ரஷியா: ரஷியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் வெந்நீர் குழாய் மீது விழுந்து உடைப்பு ஏற்பட்டதால் காரில் இருந்த 2 பேரும் உடல் வெந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். ரஷியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பென்ஷா நகரில் தற்போது கடுங்குளிர் காலம் ஆகும். இந்த காலத்தில் குளிரை சமாளிக்க குழாய் மூலம் வீடுகளுக்கு வெந்நீர் சப்ளை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இதற்காக சாலைகளுக்கு அடியில் ராட்சத குழாய்களை பதித்து, அதன் மூலம் வீடுகளுக்கு வெந்நீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பென்ஷா நகரில் உள்ள ஒரு சாலையில் 2 ஆண்களுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.