லாவோஸ்: லாவோஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் தாய்லாந்து நாட்டு எல்லை அருகே இன்று காலை 6.50 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள சையன்புலி நகரின் வடமேற்கு திசையில் 53 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஆனால் இந்நிலநடுக்கம் 700 கி.மீ. தொலைவில் உள்ள தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் வரை உணரப்பட்டு உள்ளது. போப் பிரான்சிஸ் அந்நாட்டிற்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். தாய்லாந்து நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள், பாங்காக் மற்றும் புறநகர் பகுதிகளிலும் உணரப்பட்டு உள்ளது. இதேபோன்று வியட்னாம் நாட்டின் தலைநகர் ஹனோய் பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.