டெல்லி: முல்லைப் பெரியாறு அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் ஷெகாவத் கூறினார். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரள மாநிலம் இடுக்கி காங்கிரஸ் எம்பி, டீன் குரியகோஷ் கேள்வி எழுப்பினார். அணையின் பாதுகாப்புக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அணையில் உடைப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும், கேரள மக்களுக்கு பேரிடராக அமையும் என்பதால் இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எம்.பி. குரியகோஷ் கேட்டுக்கொண்டார்.