கொல்கத்தா: கொல்கத்தாவில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிறுவன கட்டிடத்தில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வீசி எரிந்தனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனத்தின் தலைமை அலுவகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலக கட்டிடத்தின் தரைதளத்தில் பாதுகாப்பு ஊழியர்களும், அதிகாரிகளும் நின்றுகொண்டிருந்தன. அப்போது, அலுவலக கட்டிடத்தில் இருந்து ஊழியர்கள் சிலர் 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை கட்டுக்கட்டாக வீசினர். கட்டுக்கட்டாகவும், கொத்துக் கொத்தாகவும் வந்து விழுந்த பணத்தைக் கண்ட பொதுமக்கள் அதனை அள்ளிச் சென்றனர். ஆனால் எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது, இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.