×

புழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி

புழல்: சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 1600க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கைதி ஒருவர் அங்குள்ள மரத்தில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது, அங்கிருந்த மற்ற கைதிகள் பார்த்து அவரை காப்பாற்றி சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சிறை அதிகாரிகள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இவர் சென்னை ஜாபர்கான்பேட்டை இளங்கோ நகர் 6வது தெருவை சேர்ந்த தினேஷ் (எ) ஓட்டை தினேஷ் (32). என்பதும், இவர் மீது சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 23ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், நேற்று முன்தினம் சூளைமேடு காவல் நிலையம் சார்பில் குண்டர் சட்டம் போடப்பட்டது. இந்த தகவல் தினேஷுக்கு தெரியவந்ததால் மனமுடைந்த இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : suicide ,prisoner , Prison, prisoner, suicide attempt
× RELATED ‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி...