திருவொற்றியூர்: திருவொற்றியூரில் 27 டன் பிரியாணி அரிசியுடன் லாரியை கடத்தி சென்ற லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). லாரி உரிமையாளர். இவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் திருவொற்றியூர் கரிமேடு தெரு அருகே உள்ள கான்கார்ட் மத்திய அரசு சேமிப்பு கிடங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 27 டன் எடை கொண்ட 1080 பிரியாணி அரிசி மூட்டைகளை ஏற்றி பூந்தமல்லியில் உள்ள ஒரு மொத்த வியாபார கடைக்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் நிறுத்தக்பட்டு இருந்தது.