தண்டையார்பேட்டை: சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நோய்களுக்காக எப்போதும் உள்நோயாளி மற்றும் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள அறுவை சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் இரவு 3 டாக்டர்கள் செல்போனை டேபிளில் வைத்துவிட்டு, ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். பின்னர் வேலை முடிந்து 3 டாக்டர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, அவர்களது செல்போன் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டனர். இதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் 24 மணி நேர சிகிச்சை, மருந்து வழங்கும் பணி நடைபெறுவதால், நேற்று முன்தினம் இரவு திருவள்ளூரை சேர்ந்த விஜயலட்சுமி (57) என்ற பெண் ஊழியர் மாத்திரை வழங்கும் பணியில் ஈடுபட்டார்.