புதுடெல்லி: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிடக்கோரி பிரதமர் மோடியிடம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கோரிக்கை மனு அளித்தார். மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பிரதமர் மோடியை டெல்லியில் திடீரென சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் நடந்த இந்த சந்திப்பின்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிடக்கோரி 3 பக்க மனுவை பிரதமரிடம் அவர் அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: